போதையில் அரைகுறை ஆடை பாண்டிச்சேரி பஸ்ஸில் இளம்பெண் செய்த அலப்பரை
சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் பேருந்தில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் வந்தமர்ந்து குடிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் பேருந்தில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் வந்தமர்ந்து குடிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை - பாண்டிச்சேரி இடையே இயக்கப்பட்ட அந்த சொகுசு பேருந்தில் இரவு நேரத்தில் வந்து அமர்ந்துள்ளார் அந்த பெண். அவரின் அரைகுறை ஆடையே பலரையும் முகம் சுளிக்க வைதத்து. இந்நிலையில் பஸ் கிளம்ப ஆரம்பித்ததும் அந்த பெண் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்துள்ளார்.
இதனால் பஸ்ஸை நிறுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் வந்து பார்த்த போது அந்த பெண் குடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரிடம் குடிப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக வர சொல்லியுள்ளனர். ஆனால் அவர் கேட்காததால் அவரை இறக்கி விட முயன்றுள்ளனர்.
ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் வேண்டாம் என சொல்லியுள்ளனர். இதனால் அவரை பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் பயணம் முழுவதும் குடித்துக் கொண்டே அலப்பறையுடன் வந்திருக்கிறார். இப்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.