மாணவர்களின் குடும்பத்திற்கு அரிசி காய்கறி உதவிகளை வழங்கினார்கள்
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஐஇஎல்சி பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கோரோனா நோய்தடுப்பு குறித்த விழிப்புணர்வை வழஙகியதோடு மாணவர்களின் குடும்பத்திற்கு அரிசிபைகளை பள்ளியின் கல்விக்குழுத்தலைவரும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பாலாறு ஏசி வெங்கடேசன் வழங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமையில்நடந்த இந்நிகழ்வில சர்ச்பாதிரியார்கள் மற்றும் உதவிஆசிரியர்கள் ஜேசுபாதம் இராபர்ட் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.தலைமைஆசிரியர்திரு.ஜெயக்குமார்அவர்கள் தனது சொந்த நிதிஆதாரத்தில் இந்தநல உதவிகளை வழங்கினார்கள்.
வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் செல்வகுமார்